Friday, June 20, 2008

வானிலிருந்து விழும் அருவி

போன பதிவிற்கு சில மின்னஞ்சல்கள் வந்தன. பெரும்பாலானவை ”இவ்வளவு குழப்பமானதா வாழ்க்கை.. இந்த சண்டைகள், தத்துவப் பிரச்சனைகள் எல்லாம் மேலும் மேலும் வாழ்க்கையை பிரச்சனைப் படுக்கிக் கொண்டே போகின்றனவோ?.. வாழ்க்கை மிகச் சுலமானது என்றே தோன்றுகிறது.... மரநிழலில் வாழ்வதற்கு பதில் பலமாடி கட்டடங்களைக் கட்டி விட்டு, உள்ளே புழுக்கம் தவிர்க்க, குளிர் பதன சாதனங்களை பற்றி வியாக்கியானங்கள் தருகிறார்களோ என்று தோன்றுகிறது? ரமணரின் அந்த ஏழு பக்கங்களையே (''நான் யார்?”) என்னால் தாண்ட முடியவில்லை..அதுவே எனக்குப் போதும்...” என்ற மனநிலையை ஒட்டியே வந்தன.

அவரவர்களுக்கு ஏற்றது எது என்று அவர்களின் உள்ளுணர்வு சொல்கிறதோ அதுவே அவர்களின் பாதை. ரமணரிடமே தன் சஞ்சலங்கள் அடங்கி மனம் அமைதி கொள்கிறது என்ற ஒரு தெளிவு இருந்தால் அதுவே அவர்களின் பாதை. தத்துவங்களை அறியவோ வாழ்வில் உள்ள எண்ணற்ற முரண்பாடுகளை அறியவோ எந்த ஒரு கட்டாயமும் இல்லை.

அப்புறம் ஏன் இத்தனை தத்துவங்கள்? ஏன் இத்தனைப் பெரிய பதிவு ?

*-*-*

வாழ்க்கையை தத்துவங்கள் complicate பண்ணுகின்றவா? இல்லை நாமே complicate பண்ணிக் கொண்ட வாழ்க்கையை தத்துவங்கள் புரிந்து கொள்ள முயல்கின்றனவா?

வாழ்க்கை சுலபம் என்ற புரிதல் ஒருவரிடம் இருந்தம் கூட ஏன் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகுந்த சிக்கல்கள் நிறைந்ததாக உள்ளது?

*-*-*

கென் வில்பர் மற்றும் ரமணர் சொல்ல விழைவது வெவ்வேறு தளங்களில் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கென் வில்பரும் கூறியவை பெரும்பாலானது தின வாழ்வின் சிக்கல்களைத் தாண்டி, அதன் அலுப்புகள், கயமைத்தனங்களைத் மீறி மேல்நோக்கிப் போவது பற்றி. சுருக்கமாக 'Relative reality' பற்றி.

ரமணர் கூறுவதில் பெரும்பாலாவை 'Absolute reality' பற்றி. 'மரங்கள் அடர்ந்த நிழலில் குடிசை கட்டி' வாழ்வது துறவு மனநிலையை இயல்பாக உடைய ஒருவருக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். அந்த மனநிலைக்கு வர நாம் லௌகீகத்தில் பல நாட்கள் வாழ்ந்தாக வேண்டும். ஒரு கனி பழுப்பது போல் துறவும் ஒரு நிகழ்வே. அதுவரையில் இந்த 'Relative reality' பற்றிய ஒரு புரிதல் நமக்குத் தேவை. அதிலும் ஒரு நிறைவான, அடர்த்தியான வாழ்க்கையை வாழ்தலே நமக்கு தரப்பட்டுள்ள இந்த வாழ்க்கைக்கு நாம் செய்யும் மரியாதை. அர்த்தம். இந்த இடத்தில் தான் வில்பரும், அரவிந்தரும் உதவுகிறார்கள். கலை இலக்கியமும் இதற்கே. ஜெயமோகன் 'கலை இலக்கியம் எதற்கு' என்ற ஒரு கட்டுரையில் இது பற்றிக் கூறுகிறார்.

”காகா காலேல்கர் இந்திய நதிகளையெல்லாம் சென்று கண்டு சிறந்த பயண அனுபவ நூலை எழுதியவர், தமிழில் அந்நூல் வந்துள்ளது.ஒருமுறை காகா காலேல்கர் ஜோக் அருவியைக் காண காந்தியை அழைத்தார். 'இந்தியாவிலேயே உயரமான அருவி அது' என்றார்.

'நான் வானிலிருந்து விழும் அருவியை சிறுவயதிலேயே கண்டுவிட்டேன்' என்றார் காந்தி.

உச்சப் படியில் நிற்பவன் யோகி. வாழ்க்கையையே ஒரு யோகசாதனையாக, தவமாக கொண்டவன். வாழ்க்கையை வாழ்க்கையாலேயே நிறைப்பவன்., அதன்பொருட்டு ஒருவாழ்க்கையை ஓராயிரம் வாழ்க்கையளவுக்கு விரிவாக்கிக் கொண்டவன். அவனுக்கும் கலையும் இலக்கியமும் தேவை இல்லை. காந்தி இலக்கியம் படித்தவரல்ல, இசை கேட்டவருமல்ல.பிறருக்கு இலக்கியம் அவர்கள் வாழ்வின் இடைவெளிகளை ஓயாது நிரப்பியபடி பெய்யும் பெரும் பெருக்கு. வெற்றிடங்களை வானமே நிரப்புகிறது என்பது நம் ஞான மரபின் கூற்று. இலக்கியம் கற்பனையின் எல்லையில்லாத வானம். வானமே மழைக்கிறது. மண்ணை நிறைக்கிறது."

தத்துவத்தின், Rhetoricக்கின் தேவையும் அதே போல் தான். நம்மைப் போன்ற எளியவர்கள் வாழ்வின் வெற்றிடங்களை நிரப்பிக் கொள்வதற்கு!

*-*-*

தவிர, கட்டுரை எழுதப்பட்டது தமிழ்ச் சூழலில் ஒரு சிறு உரையாடலைத் துவக்குவதற்கே. மேலும் மேலும் குழப்புவத்ற்கு அல்ல.

ஆனால் Einstein சொன்னது போல், 'Make everything as simple as possible, but not simpler'.

(நாராயணன் ஒரு நீண்ட பின்னூட்டத்தை இங்கு எழுதியுள்ளார். நன்றி).


6 comments:

Anonymous said...

So all this are just to fill the gaps? kind of entertainment? there is no actual search in purpose?
I think watching a movie would be a better entertainment..

said...

வணக்கம்.பத்ரிக்கு இட்ட பின்னூட்டம் கண்டு தங்கள் பதிவுக்கு வந்தேன்.நேர அவகாசம் கிடைக்கும் போது மீண்டும் ஒரு முறை உங்கள் எழுத்துக்களை ஆராய வேண்டும்.

said...

Anon,

நான் அப்படி சொல்லவில்லையே.. ஒருவருக்கு ஒருவர் அது மாறுபடும். புத்தகங்கள்,பயணங்கள், இசையில் இருந்து, ஏன் சினிமா கூட ஒருவரின் தேடலுக்கு காரணமாக அமையலாம். சினிமா தான் எனக்கு ஒரு பெரும் கனவாக, அலைக்கழிப்பாக பலகாலம் இருந்தது. இன்னமும் கூட..

said...

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. படிப்பதற்கு அருமையான விடையங்கள் சீரான எழுத்தோட்டம்.

Anonymous said...

PROF. R. BALASUBRAMANIAN
Director, The Institute of Mathematical Sciences, Chennai
&
PROF. RANJIT NAIR
Director, Centre for Philosophy & Foundations of Science*, Delhi
cordially invite you to attend a lecture entitled
\ IS THE HUMAN BRAIN UNIQUE? "
by
PROF. V.S. RAMACHANDRAN1; 2
Director, Centre for Brain and Cognition
University of Californoia at San Diego, La Jolla +
California, USA
Time: 4.00 pm. Friday June 27, 2008
Venue: Ramanujan Auditorium
The Institute of Mathematical Sciences
For further details please contact Prof. R. Simon
The Institute of Mathematical Sciences. 044-2254 3120
* This SIR CHARLES S. SHERRINGTON 150TH ANNIVERSARY LECTURE is a part of the
WORLD SCIENCE FESTIVAL III of the Centre for Philosophy & Foundations of Scienc

said...

Anon,

Thanks a lot for the info..